Friday, March 19, 2010

சிலையின் புல‌ம்ப‌ல்

க‌ன்ன‌ம் தொடுவ‌தும்
இடைக் கிள்ளுவ‌தும்
ஆறிய காய‌த்தில்
சின்ன‌தாய் கீறல்..

எனை சிரித்த‌ப‌டி
செதுக்கிய‌தால்
அழுவ‌து தெரிவதே இல்லை..

கைகால் அசையாத‌
கர்ப்ப‌கிர‌க‌ சிலையை
பார்ப்ப‌வ‌ரெல்லாம்
வேண்டி செல்கிறார்க‌ள்..
இது வேண்டும்..அது வேண்டுமென

நான் கூட‌ ப‌ர‌வாயில்லை ‍‍
போலிருக்கிற‌து..!!

செதுக்கிய‌வ‌ன்
காய‌ப்படுத்திய‌தில்
ந‌டை'முறை'ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து
இன்றைய‌ க‌லாச்சார‌ம்..

குறிப்பு:என‌து ந‌ண்ப‌ர் ஜானிபிர‌காஷ் எழுதிய‌ இர‌ண்டுவ‌ரி க‌விதையில் அழாம‌ல் பிறந்த‌து இந்த‌ குழ‌ந்தை
ந‌ன்றி!! ஜானி