Monday, March 28, 2011

தெரியாது

கனவுகளில் கைக்கோர்த்துக்கொண்டேன்
என்னில் நான் தொலைவது தெரியாது..


மௌனம் போர்த்திக்கொண்டேன்
உள்ளம் பேசுவது தெரியாது..


கண்களை மூடிக்கொண்டேன்
இறந்தும் வாழுமிடம் தெரியாது..


மனம்தனில் நினைத்துக்கொண்டேன்
இருப்பிடத்தில் உயிர்கள் தெரியாது..


தெரியாது.. தெரியாது..
உன் அருகாமையில் எதுவுமே தெரியாது..


நீ பேசாமல்... பார்க்காமல்.. இருக்கும் போது
உன் ஒவ்வொரு விரலும் செய்யும் அசைவுகள்..
மேலும் கீழுமாய் பொய் பேசும் விழிகள்..
மனதென்னும் மூங்கிலுக்குள் நுழைந்தது காற்று..


எல்லாமே பழசுதான் என்றாலும்
காதல்னு வரும்போது புதுசுதானே..
உன்னோட இதழ் விரியாத சிரிப்பு மாதிரி..


Tuesday, March 8, 2011

முதல் விசும்பலிலே..

காய்க‌றி ச‌ந்தையிலும்
பூக்க‌டை வீதியிலும்
முழுமை அடைகிற‌து
முப்ப‌த்திமூன்று விழுக்காடுக‌ள்...

விழுக்காடுக‌ள் அதிக‌ரித்தாலும் ‍இன்னும்
சில‌ கிராம‌ங்க‌ளில் கிளிக‌ள்
கூண்டுக‌ளில்தான் வாழ்கிற‌து..!!

கலாச்சார‌மும் நாக‌ரிக‌மும் -
அம்மாவிலிருந்து மம்மியிலும்..
அம்மியிலிருந்து மிக்ஸியிலும்..
க‌ன‌காம்ப‌ர‌ ரெட்டை ஜ‌டையிலுருந்து காற்ற‌ளாவிய‌ கூந்த‌லிலும்.. 

வேண்டியது கிடைத்தாலும்
'இன்னும் வேண்டுமென்று'
வேண்டுமென்றே
வேண்டுவோர் கணக்கில் ஆயிரம்..

இன்று -
சுத‌ந்திர‌ம் அடைவ‌தும்
உரிமைக‌ள் பெறுவ‌தும்
விடுத‌லைப் ப‌த்திர‌ங்க‌ள் மூல‌ம்...

'ம்மா'யெனும் முதல் விசும்பலிலே
தாய்மை வட்டதினுள்
போதுமென்றே அடங்கிவிடுகிறது
பெண்ணின் ஜென்ம சாபல்யங்கள்...

<மார்ச் 8> மகளிர் தின வாழ்த்துக்கள்..