Wednesday, October 3, 2007

காதலும் நானும்


உண்மையாகவே கண்ணாடியில்
இன்றைக்கு மட்டும்
அழகாகவே தெரிகிறேன்..

இரவும் பகலும் -
நிலவும் சூரியனும் -
விழித்தேயிருக்கிறது..

நாட்கள் எனக்கே
சொந்தமாக இருக்கிறது..

பேருந்து பயணங்களில்
தனிமையாக
பயணிப்பதில்லை..

பூக்கள் படுக்கின்ற
சாலையில் நடப்பதேயில்லை..

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
வித்தியாசமே தெரிவதில்லை..

ஒவ்வொரு வேலையும்
இரண்டு முறை செய்யும்
பழக்கம் பழகிவிட்டது..


மிக சரியான பொய்களை
நிதமும் சொல்லிக் கொள்கிறேன்
கண்மூடிதனமாக..

எல்லா அழகுடனும் - உன்னையே
ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது
கண்கள்...

உணவு வேளையில்
பொறியலில் உள்ள
கடுகையும் பருப்பையும்
பிரித்துக் கொண்டிருக்கிறேன்..

காதலே!..
குழந்தை அழுதுக்கொண்டேயிருக்கிறது
நிலாவைக் காட்டி
சோரூட்டுவாயா..




2 comments:

Paul said...

mmm... enna da unnamayileye yarayo love panndra mathiri ezhuthi irukka... kadhal vanthaa thaan indha mathiri variyellam varum...

unmaya sollu.. yar antha ponnu....

Unknown said...

ஒவ்வொரு வேலையும்
இரண்டு முறை செய்யும்
பழக்கம் பழகிவிட்டது..

I couldn't understood these lines.