Tuesday, September 18, 2007

பாத்திரம் அறிந்த தெய்வங்கள்


வேதங்கள் ஓதும் சத்தம் கேட்கிறது..
ஆலயமணி ஓலிக்கிறது..
தொழுகையும் ஆரம்பித்தாகிவிட்டது..
இன்னும் காணவில்லையே பக்தர்களை.?..

ஒவ்வொரு தெய்வங்களும்
பக்தர்களைத் தேடி
ஆலயங்களின் வாசலில்..

பாத்திரம் அறிந்து தன்னிடத்தை
தேர்ந்தெடுத்த தெய்வங்கள்..

நிதி நிலைமை பற்றாக்குறை -
உண்டியலுக்கு பட்டையிட்டு
பொட்டிட்டு பூவைத்தார் பூசாரி!..

பல கேள்விகளுக்கு -
பதில் அளிக்க முடியாமல்
பாய் விரித்து மரித்து போகும்
சுடுகாடு தவிர்த்த மனித உயிர்கள்..

கனவில் கூட
வரிசையில் தான்
உணவு கிடைக்கிறது...

புது காரணங்கள் கிடைக்காமல்
வழக்கம் போல் -
அதே இடத்தில்..

No comments: