Friday, September 21, 2007

ங்கா..


போன உசுரு திரும்பி வந்துடுச்சு..
உன் உசரம் காண மனசு தேம்பி அழுதுடுச்சு..
எல்லா செல்வமும் உன் மூலமா வந்துடுச்சு..
'ம்மா'னு சொல்லிக் கேட்க மனசு ஏங்கிடுச்சு..

கொடுத்த பாரத்த உன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்!
கொண்ட துணியோட மாரோட அணைச்சுகிட்டேன்!
ஒத்தடமா கண்ணீர பாதத்துல தெளிச்சுவச்சேன்!
ஒத்த ரூபா காச மஞ்ச துணியில முடிஞ்சுவச்சேன்!

முட்ட கண்ணும் மொட்டு இதழும் துவளுது.. பேசுது..
வட்ட நிலவும் உன் அழக பார்த்து மயங்குது.. ஏங்குது..
கஷ்டமில்லாம கை ரெண்டையும் முறிக்குது.. சிரிக்குது..
அது இஷ்டத்துக்கு இன்னிக்கே அழுது பழகுது..

விடிஞ்சதும் நிலவும் தூங்குது நீயும் தூங்குற..
கண்ணு கொஞ்சம் அசந்தா 'ங்கா..ங்கா'னு அழுதுபுடுற..
எரும்பு கடிச்சுதா பசிக்குதான்னு தெரியாம புலம்புறேன்!.
அரும்பு தேகத்த உசுரோட சேர்த்து அணைக்குறேன்..!..

2 comments:

வசீகரா said...

Hi da,
Very Nice concept and poetry...

விடிஞ்சதும் நிலவும் தூங்குது நீயும் தூங்குற..
கண்ணு கொஞ்சம் அசந்தா 'ங்கா..ங்கா'னு அழுதுபுடுற..

I don't think these are appropriate words for the flow.. especially
கண்ணு கொஞ்சம் அசந்தா 'ங்கா..ங்கா'னு அழுதுபுடுற..
..
one more
நஷ்ட வேணாம்னு இன்னிக்கே அழுது பழகுது.. I could not understand?

-- Vaseegara

Unknown said...

கஷ்டமில்லாம கை ரெண்டையும் முறிக்குது.. சிரிக்குது..

I couldn't understood.