சுத்த சைவம்
சண்டைகள் இல்லை;சமரசம் வேண்டாம்;முறித்து கொள்கிறது உறவுகளை..சட்டம் தூவும் விவாகரத்து அக்ஷதைகள்..
சிறப்பு வரிசை கட்டணம்உண்டியலும் வாய் பிளந்ததுகொட்டாவி விடும் வாசல் தெய்வங்கள்..
நடுத்தெருவில்துடித்து கொண்டிருக்கும் உயிர்வேடிக்கை பார்த்துவிட்டுநடுப்பக்கத்தைத் திருப்பும்ஆசாமி..
கரைத்தாண்டிகலாச்சாரத்தின் வண்ணம் மாற்றும்கடற்கரை நிலாக்கள்..
பத்து மாத வலியைபத்தே நிமிடத்தில்மறக்க வைக்கும்பெரிய பத்தின் காந்தி சிரிப்பு..முடித்து வைக்க மரணமே வந்தாலும்அதற்கும் சிலையெழுப்பிமாலையிடுவான் -எங்க ஊர் அரசியல்வாதி..
கோவணமும்கட்சி கொடியாகும்அபாயம்..!
2 comments:
title-kkum kavithaikkum ulla poruthathai romba sariya purinjuka mudiyatiyum, kavithai varigal romba strong... good one...
நடுத்தெருவில்
துடித்து கொண்டிருக்கும் உயிர்
வேடிக்கை பார்த்துவிட்டு
நடுப்பக்கத்தைத் திருப்பும்
ஆசாமி..
பத்து மாத வலியை
பத்தே நிமிடத்தில்
மறக்க வைக்கும்
பெரிய பத்தின் காந்தி சிரிப்பு..
nice lines .....
Post a Comment