Sunday, December 23, 2007

காதல் படிக்கட்டு

முதல் சிரிப்பில் -
தாயவளின் அருகாமையை
உணர்ந்தேன்..

இரண்டாம் சந்திப்பில்
சிறகேதும் இல்லாமல்
பறந்தேன்..

மூன்றாம் பொழுதில்
நிலவோடு தனிமையில்
பேசி மகிழ்ந்தேன்..

நான்காம் விழிகள்
பார்ப்பது கூட தெரியாமல்
யாவும் மறந்தேன்..

ஐந்தே நிமிடம் கழித்து வருவதானாலும்
நொடிக்கொரு முறை வழிப்பார்த்தே
விழித்தேன்..

ஆறறிவை மறந்து
நடுரோட்டில் எதையோ பேசி
புலம்பி அலைந்தேன்..

ஏழுலகும் எட்டுத்திசையும்
காலடியில் இருப்பதாய்
கர்வமடைந்தேன்...

நீ காதலி ?
நான் காதலன் ?
கேள்விக்கு விடையளிக்காமலும்
விடைபெற முடியாமலும்
தூக்கம் தொலைத்தேன்..

பயணங்கள் முடியவிலலை
படிகளும் தூரமில்லை

காதலில் -
மறக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
மரணத்திற்கு சமானமே..

1 comment:

Anonymous said...

காதலில் -
மறக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
மரணத்திற்கு சமானமே....

y did u say like?
if u r having true kindness,that kindness helps u to attain success.
is this just a poetry line?
or your feelings? anyway all the best!