Sunday, December 23, 2007

கண்ணாடிப் புன்னகை

பனிக்காற்றில்
தலை அசைத்து உறவாடும்
என் தோட்டத்து மலர்கள்...

வேப்ப மரத்து கூட்டில்
சிறகடித்து கூச்சலிடும்
சிட்டுக்குருவி..

தெருக்கதவோரம் செய்தித்தாள்,
மணிச்சத்தத்துடன் பால்காரன்..
கோலத்தை அழிக்காமல்...

பேருந்து படிக்கட்டில்
சிரித்தும்ம்.. சத்தமிட்டும்ம்..
ஊஞ்சலாடும் மாணவர்கள்...

புன்னகைத்தப்படியே இருந்தான்
என் மகன் - மாலையிட்ட
கண்ணாடிக் கூட்டில்...

No comments: