பனிக்காற்றில்
தலை அசைத்து உறவாடும்
என் தோட்டத்து மலர்கள்...
வேப்ப மரத்து கூட்டில்
சிறகடித்து கூச்சலிடும்
சிட்டுக்குருவி..
தெருக்கதவோரம் செய்தித்தாள்,
மணிச்சத்தத்துடன் பால்காரன்..
கோலத்தை அழிக்காமல்...
பேருந்து படிக்கட்டில்
சிரித்தும்ம்.. சத்தமிட்டும்ம்..
ஊஞ்சலாடும் மாணவர்கள்...
புன்னகைத்தப்படியே இருந்தான்
என் மகன் - மாலையிட்ட
கண்ணாடிக் கூட்டில்...
No comments:
Post a Comment