சண்முகம்ம்... - இவள்..
புவனா.. புவனா .. - இவன்..!
உனக்காகவே வாழ்கிறேன் - அவள்
எனக்காகவே பிறந்தவள் - அவன்..!
மனசுக்குள்ள சிறுசா சிரிச்சுப்பா.. - இவள்..
எல்லாத்துலயும் ஜெயிச்சுட்டதா நினைக்கிறான் - இவன்..?
நேரம் போவதே தெரியவில்லை - அவள் ..
நிலவும் உனைப்போல் அழகில்லை - அவன்..!
மொழியே தெரியாத உன் ஒருகன அணைப்பு சுகம் - இவள்..
திசைத்தெரியாம போற பட்டம் பிடிச்சுருக்கு - இவன்..!
விழியிலிருந்து அகலவேயில்லை நம் கனவு - அவள்..
விடுமுறையில் விடியவேயில்லை விடியல் - அவன்..!
கையில் பத்திரிக்கையோடு - இவள்
மனதில் கடமையோடு - இவன்..?
விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்..
இரண்டு வருடம் கழித்து.....
... .. ...
இவர்களின் குழந்தைகள் சந்தித்தன
உன் பெயர் என்ன? - புவனேஸ்வரி..
உன் பெயர் என்ன? - சண்முகநாதன்...
காதல் வாழ்கின்றது
இவர்களின் முகவரியில்...
5 comments:
"விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்.."
These lines are very touching and delivers the real feeling of a true love ....
A nice one .......
Rajkumar N
சிறு கவிதையில் ஒரு காதல் கதை... முழு நேர திரைப்படம் பார்த்த உணர்வு.. ஆனால் "கையில் பத்திரிக்கையோடு - இவள்
மனதில் கடமையோடு - இவன்..?" வரிகளில் அவள் பக்க நியாயங்கள் சொல்லப்படவில்லையோ என்கிற உணர்வு... மற்றபடி அருமை...
நான் மிகவும் ரசித்தது கீழ்காணும் வரிகளை தான்:
"விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்.."
ஆழமான அர்த்தமுள்ள வரிகள் அவை...
//காதல் வாழ்கின்றது
இவர்களின் முகவரியில்...//
அநேக காதல்கள் இப்படி முகவரியில்தான் வாழ்கின்றன!
Nice da rama
விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்..
Excellent lines.
Post a Comment