Tuesday, June 3, 2008

காதல் வாழ்கின்றது

சண்முகம்ம்... - இவள்..
புவனா.. புவனா .. - இவன்..!

உனக்காகவே வாழ்கிறேன் - அவள்
எனக்காகவே பிறந்தவள் - அவன்..!

மனசுக்குள்ள சிறுசா சிரிச்சுப்பா.. - இவள்..
எல்லாத்துலயும் ஜெயிச்சுட்டதா நினைக்கிறான் - இவன்..?

நேரம் போவதே தெரியவில்லை - அவள் ..
நிலவும் உனைப்போல் அழகில்லை - அவன்..!

மொழியே தெரியாத உன் ஒருகன அணைப்பு சுகம் - இவள்..
திசைத்தெரியாம போற பட்டம் பிடிச்சுருக்கு - இவன்..!

விழியிலிருந்து அகலவேயில்லை நம் கனவு - அவள்..
விடுமுறையில் விடியவேயில்லை விடியல் - அவன்..!

கையில் பத்திரிக்கையோடு - இவள்
மனதில் கடமையோடு - இவன்..?

விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்..

இரண்டு வருடம் கழித்து.....
... .. ...

இவர்களின் குழந்தைகள் சந்தித்தன
உன் பெயர் என்ன? - புவனேஸ்வரி..

உன் பெயர் என்ன? - சண்முகநாதன்...

காதல் வாழ்கின்றது
இவர்களின் முகவரியில்...

5 comments:

J said...

"விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்.."
These lines are very touching and delivers the real feeling of a true love ....
A nice one .......
Rajkumar N

Paul said...

சிறு கவிதையில் ஒரு காதல் கதை... முழு நேர திரைப்படம் பார்த்த உணர்வு.. ஆனால் "கையில் பத்திரிக்கையோடு - இவள்
மனதில் கடமையோடு - இவன்..?" வரிகளில் அவள் பக்க நியாயங்கள் சொல்லப்படவில்லையோ என்கிற உணர்வு... மற்றபடி அருமை...

நான் மிகவும் ரசித்தது கீழ்காணும் வரிகளை தான்:

"விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்.."

ஆழமான அர்த்தமுள்ள வரிகள் அவை...

அன்புடன் அருணா said...

//காதல் வாழ்கின்றது
இவர்களின் முகவரியில்...//

அநேக காதல்கள் இப்படி முகவரியில்தான் வாழ்கின்றன!

Siva said...

Nice da rama

Bravey said...

விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்..


Excellent lines.