கோலமிடும் தருவாயில்
முன்விழும் கூந்தல்முடி -
புள்ளிகளுக்கு நடுவே பேசுமே
அந்த மௌனம்..!
கோயிலைச் சுற்றுகையில்
பாதத்தோடு இதழ்கள் -
அடிமேல் அடிவைத்து முணுமுணுக்குமே
அந்த மௌனம்..!
குளித்துவிட்டு திரும்புகையில்
தோளில் மின்னும் சிறுதுளி -
மயங்கி மயங்கி சிணுங்குமே
அந்த மௌனம்..!
நிலவு உறங்குகையில்
காற்றோடு இரவுகள் -
சத்தமே இல்லாமல் உரசிச்செல்லுமே
அந்த மௌனம்..!
கோபம் கொள்கையில்
கருவிழி இரண்டுமே -
சொல்லாமல் சொல்லிக் கொல்லுமே
அந்த மௌனம்..!
வெட்கம் அடைகையில்
குறுஞ்சிரிப்போடு விரல்கள் -
முடிச்சுகளை அவிழ்க்குமே
அந்த மௌனம்..!
No comments:
Post a Comment