இதமான காற்று
வருவதானாலும்
ஜன்னலின் வாயை
மூடியே வைத்திருந்தேன்..
இருட்டின் சிரிப்பில்
திறந்திருந்த கதவை - யாரோ
தட்டியதுப்போலிருந்தும்,
திறக்கவேயில்லை..
அதிசயமாக அவ்வூரில்
முதலில் சொல்வதைக்
காது கொடுத்துக் கேட்டனர்..
ஆனால் ராஜாவுக்கு பணிசெய்ய
பணிப்பெண்கள்தான் யாருமேயில்லை..
அன்றைய நாயகிகள்
வந்த வண்ணமுள்ளனர்
அன்றும் நினைத்தது
பலிக்கவேவில்லை!!
பசிக்கவில்லை
உண்டதும் செறிக்கவில்லை
போலிருந்தது
சமையலறை விளக்கு
எறியவில்லை என்பதால்..
இடம்மாற்றி வைத்ததும்
எல்லாப் பொருளும்
இன்னும் அழகாக
தெரியவே செய்தன..
ஒளியை அணைக்காமல்
ஒலியை அதிகப்படுத்திக்கொண்டேன்
சிரிக்காதீர்கள் - நானொன்றும்
ஒளிந்துக்கொள்ளவில்லை
வருவதானாலும்
ஜன்னலின் வாயை
மூடியே வைத்திருந்தேன்..
இருட்டின் சிரிப்பில்
திறந்திருந்த கதவை - யாரோ
தட்டியதுப்போலிருந்தும்,
திறக்கவேயில்லை..
அதிசயமாக அவ்வூரில்
முதலில் சொல்வதைக்
காது கொடுத்துக் கேட்டனர்..
ஆனால் ராஜாவுக்கு பணிசெய்ய
பணிப்பெண்கள்தான் யாருமேயில்லை..
அன்றைய நாயகிகள்
வந்த வண்ணமுள்ளனர்
அன்றும் நினைத்தது
பலிக்கவேவில்லை!!
பசிக்கவில்லை
உண்டதும் செறிக்கவில்லை
போலிருந்தது
சமையலறை விளக்கு
எறியவில்லை என்பதால்..
இடம்மாற்றி வைத்ததும்
எல்லாப் பொருளும்
இன்னும் அழகாக
தெரியவே செய்தன..
ஒளியை அணைக்காமல்
ஒலியை அதிகப்படுத்திக்கொண்டேன்
சிரிக்காதீர்கள் - நானொன்றும்
ஒளிந்துக்கொள்ளவில்லை
No comments:
Post a Comment