Saturday, April 10, 2010

வானம் பார்த்த பூமி

விள‌க்க‌ ஏத்தி வ‌ச்சாச்சு
அடுப்புவ‌யிறு இன்னும் எறிய‌ல‌..
எல்லாப்பதிலும் கேள்வியாத்தான் இருக்கு
ஏனெனும் தெரிய‌ல‌..

விழுந்து போன விழுதெல்லாம்
வேரா இன்னும் மாறல..
விடைபெற்று போனவங்க
விடைகொடுத்துட்டும் போகல..

ப‌ல் இளிச்சு நிக்குது விளைஞ்ச‌ நில‌ம்
திருவிழாவில‌ வித்துப்பார்த்தேன்.. விற்கல..
தேர்தல் வந்துடுது...விசேஷ‌ம் பார்த்துடுது...
அதனால கூட்டிக்க‌ழிச்சுப் பார்க்க‌ல‌..

ஆடு கோழி உயிர வாங்கியிருக்கோம்
வரம் ஒண்ணும் கொடுக்கல..
போக போர உசுரு - முன்ன பின்ன
சொல்லிக்கிட்டும் போறதில்ல..
 

No comments: