காய்கறி சந்தையிலும்
பூக்கடை வீதியிலும்
முழுமை அடைகிறது
முப்பத்திமூன்று விழுக்காடுகள்...
விழுக்காடுகள் அதிகரித்தாலும் இன்னும்
சில கிராமங்களில் கிளிகள்
கூண்டுகளில்தான் வாழ்கிறது..!!
கலாச்சாரமும் நாகரிகமும் -
அம்மாவிலிருந்து மம்மியிலும்..
அம்மியிலிருந்து மிக்ஸியிலும்..
கனகாம்பர ரெட்டை ஜடையிலுருந்து காற்றளாவிய கூந்தலிலும்..
கனகாம்பர ரெட்டை ஜடையிலுருந்து காற்றளாவிய கூந்தலிலும்..
வேண்டியது கிடைத்தாலும்
'இன்னும் வேண்டுமென்று'
வேண்டுமென்றே
வேண்டுவோர் கணக்கில் ஆயிரம்..
இன்று -
சுதந்திரம் அடைவதும்
உரிமைகள் பெறுவதும்
விடுதலைப் பத்திரங்கள் மூலம்...
'ம்மா'யெனும் முதல் விசும்பலிலே
தாய்மை வட்டதினுள்
போதுமென்றே அடங்கிவிடுகிறது
பெண்ணின் ஜென்ம சாபல்யங்கள்...
<மார்ச் 8> மகளிர் தின வாழ்த்துக்கள்..
1 comment:
superb.. j
Post a Comment