Monday, March 28, 2011

தெரியாது

கனவுகளில் கைக்கோர்த்துக்கொண்டேன்
என்னில் நான் தொலைவது தெரியாது..


மௌனம் போர்த்திக்கொண்டேன்
உள்ளம் பேசுவது தெரியாது..


கண்களை மூடிக்கொண்டேன்
இறந்தும் வாழுமிடம் தெரியாது..


மனம்தனில் நினைத்துக்கொண்டேன்
இருப்பிடத்தில் உயிர்கள் தெரியாது..


தெரியாது.. தெரியாது..
உன் அருகாமையில் எதுவுமே தெரியாது..


நீ பேசாமல்... பார்க்காமல்.. இருக்கும் போது
உன் ஒவ்வொரு விரலும் செய்யும் அசைவுகள்..
மேலும் கீழுமாய் பொய் பேசும் விழிகள்..
மனதென்னும் மூங்கிலுக்குள் நுழைந்தது காற்று..


எல்லாமே பழசுதான் என்றாலும்
காதல்னு வரும்போது புதுசுதானே..
உன்னோட இதழ் விரியாத சிரிப்பு மாதிரி..


No comments: