Tuesday, September 18, 2007

முதன்முறையாய்...

கூந்தலில் படியாத
ஓரிரு தலைமுடி
பின்னிழுக்கிறாய் - கேட்காமல்
முன்னே விழுகிறது...

மடியில் பூத்திருக்கும்
தாவணிப்பூக்கள்
சரி செய்துக்கொள்கிறாய்
தவறில்லை - ஆனால்
தவறல்லவா செய்யத் தூண்டுகிறாய்...

தெரியுமா? தவறு செய்யத் தூண்டுபவருக்குத்தான்
தண்டனை அதிகம் -
(என்) ஆயுள் தண்டனை...

புத்தகத்தை அணைத்தபடி
தலைக்குனிந்தபடி -
ஓர் அழகு...

ஒற்றை ஜடை
சிற்றிடை
கொஞ்சம் ... இல்லை இல்லை
கொஞ்சும்...

பின் செல்கிறது நிழல்
நானும்...
முதன்முறையாய்!

1 comment:

Unknown said...

I like this kavithai very much.