கூந்தலில் படியாத
ஓரிரு தலைமுடி
பின்னிழுக்கிறாய் - கேட்காமல்
முன்னே விழுகிறது...
மடியில் பூத்திருக்கும்
தாவணிப்பூக்கள்
சரி செய்துக்கொள்கிறாய்
தவறில்லை - ஆனால்
தவறல்லவா செய்யத் தூண்டுகிறாய்...
தெரியுமா? தவறு செய்யத் தூண்டுபவருக்குத்தான்
தண்டனை அதிகம் -
(என்) ஆயுள் தண்டனை...
புத்தகத்தை அணைத்தபடி
தலைக்குனிந்தபடி -
ஓர் அழகு...
ஒற்றை ஜடை
சிற்றிடை
கொஞ்சம் ... இல்லை இல்லை
கொஞ்சும்...
பின் செல்கிறது நிழல்
நானும்...
முதன்முறையாய்!
1 comment:
I like this kavithai very much.
Post a Comment