சொல்வதற்கு முன்னே
விரும்பியவற்றை யாவும்
சொடிக்கிய நிமிடத்தில்..
வாசலில் பூசணிப்பூ கோலம்;
விட்டு விட்டு கூவும் சேவல்;
சாம்பிராணி வாசனை முற்றத்தில்..
தங்கைக்கு குதிரை வால்
ரெட்டை ஜடை அலங்கரித்து
முத்தமிடுவேன் கன்னத்தில்..
அத்தை மாமா வேண்டாம்;
அம்மா அப்பான்னு கூப்பிடுவேன்;
தாயம் விளையாடுவேன் கூடத்தில்..
மிஞ்சும் நேரங்களிலும்
விடியல் வாசல வந்த பிறகும்
கொஞ்சனும் கெஞ்சனும் கட்டிலில்..
வெள்ளிக்கிழமை விளக்கு போடுவேன்;
சத்தமா பாட்டு பாடுவேன்;
மெளன விரதம் இருப்பேன் சனிக்கிழமையில்..
தேன் சுவைக்கொண்ட வார்த்தைகளை
தேனீ சுவைத்தாலும் திகட்டியே
மறித்திருக்கும் இதழ்மடியில்..
நினைக்கும் போதே...?
உப்பு நீரோடு கூடுதலாய் கண்ணீரையும்
சுவைத்தது கடல் மணல்..
3 comments:
Good one... Naan romba rasitha kavithaigalil ithuvum onnu... but innum neraya ezhuthi irukalamo apadinu thonichu...
really it recals my childhood days!
nice lines.....
Post a Comment