Monday, April 5, 2010

திருத்தப்படாதக் கவிதை

அட‌ம்பிடித்து இத‌ழ்தொடும்
முன்கூந்த‌ல் முடிதனை
அறியா..ம‌ல் வரிசைசெய்கிறாய் -
நிச்ச‌ய‌ம் தீட்டியப்பிறகு
தூக்க‌ம் தொலைத்திருப்பான் பிர‌ம்ம‌ன்..!!

உன் அழகில்
‌ம‌ழை நனைந்துகொண்டிருந்த‌து..
கால்கள் தெரியாம‌ல்
பாவாடைத‌னைப் பிழிந்தாய்..
உண்மையாக‌வே கால்க‌ள்
தெரிய‌வேயில்லை...!

காற்றுக்கு கூட‌
அசைந்து கொடுப்பதில்லை
தோளில் தூங்கும் துப்பட்டா..
சரிந்தாலும்..சரியாக‌
சரிசெய்துக் கொள்கிறது..!!
(பாதைத்தவறும் குழந்தையை
"ஏய் அங்க போகாத.."என்று
பக்கத்திழுக்கும் தாய்ப்போல‌!..)

நடைப்பழகி நடக்கிறாய்..
இடைத்தழுவாமல் உடுத்துகிறாய்..
மடைத்திறந்தே இருக்கிறது.
தூண்டிலிடாமலே -
மாட்டிக்கொள்(ல்)கின்றன மீன்கள்..

எதிர்வரும் போதெல்லாம்
எதிரேப் பார்க்கிறாய்
எதிர்பார்க்கிறாய்..
எதிர்த்தும் பார்க்கிறாய்..
மதில்மேல் பூனையானேன்..

திருமணத்தில்
தூக்கிலிடப்படுவது பெண்கள் ‍-
காதலில் சத்தியமாக‌
ஆண்கள்தான்..
இது நிதர்சனமான உண்மை..!!

அப்ப‌ன் திட்டியிருக்க‌லாம்..
அண்ண‌ன் அடித்தேயிருக்க‌லாம்..
நீயாவ‌து முறைத்திருக்க‌லாம்..
எதுவுமேயில்லை - இப்போது
காத‌ல் நிஜ‌மாக‌வே வ‌ந்துவிட்ட‌து!..

தினமும்
விடிந்துக்கொண்டேதான்
இருக்கின்றது..
இன்னும் தீரவில்லை
உன் அழிச்சாட்டியங்கள்..

தலைப்பு உபயம்:  நண்பர் பௌல்..
 

1 comment:

Bravey said...

எதிர்வரும் போதெல்லாம்
எதிரேப் பார்க்கிறாய்
எதிர்பார்க்கிறாய்..
எதிர்த்தும் பார்க்கிறாய்..
மதில்மேல் பூனையானேன்..


எனக்கு பிடிச்சிருக்கு!