பேருந்துகளில்
அழகிய தேவதைகளைப்
பார்க்கும் போதெல்லாம் அவளுடன்
டூயட் பாடி விடுகிறேன்..
பெயர் தெரியாமல்
ஊர் தெரியாமல்
முதல் பார்வையில்
வருவது தானே காதல்..??
பாதி பாடலில்
கதாநாயகிகள்
மாறுவது கூட உண்டு..
சில பேருந்துப்
பயணங்களில்
விவாகரத்துச் செய்தும்
இறங்கியிருக்கிறேன்..
இறங்கிப் பயணிக்கையில்
ஆலய மணியோடுக்
கேட்கும் நாணயங்களில்
சிணுங்கல்கள்..
கோயில் மணியுடன் கேட்கும்
"ஐயா பசிக்குதையா.."
முணகல்கள்..
பொறுப்பேயில்லாத உலகம்;
அக்கரையில்லாத மனிதர்கள்;
ஆவேச வசனங்கள்
பேசாமல் நகர்வதில்லை
உள்ளிருக்கும் கதாநாயகர்கள்..
ஆவேசத்துடன்
அறைக்குள் நுழைந்தேன்..
துவைக்காமல்
துணிகள் விழித்திருந்தன..
நாளைக்கென்று
ஒன்றை மட்டும்
கைகள் கசங்காதாவாறு
துவைத்தேன்..
மற்றவை
அழுக்குச் சேற்றில்
அழுது வடிந்தன..
உலகம்
அதன் நேரத்திற்கு
உறங்க சென்றது..
நானும் அப்படியே..
அழகிய தேவதைகளைப்
பார்க்கும் போதெல்லாம் அவளுடன்
டூயட் பாடி விடுகிறேன்..
பெயர் தெரியாமல்
ஊர் தெரியாமல்
முதல் பார்வையில்
வருவது தானே காதல்..??
பாதி பாடலில்
கதாநாயகிகள்
மாறுவது கூட உண்டு..
சில பேருந்துப்
பயணங்களில்
விவாகரத்துச் செய்தும்
இறங்கியிருக்கிறேன்..
இறங்கிப் பயணிக்கையில்
ஆலய மணியோடுக்
கேட்கும் நாணயங்களில்
சிணுங்கல்கள்..
கோயில் மணியுடன் கேட்கும்
"ஐயா பசிக்குதையா.."
முணகல்கள்..
பொறுப்பேயில்லாத உலகம்;
அக்கரையில்லாத மனிதர்கள்;
ஆவேச வசனங்கள்
பேசாமல் நகர்வதில்லை
உள்ளிருக்கும் கதாநாயகர்கள்..
ஆவேசத்துடன்
அறைக்குள் நுழைந்தேன்..
துவைக்காமல்
துணிகள் விழித்திருந்தன..
நாளைக்கென்று
ஒன்றை மட்டும்
கைகள் கசங்காதாவாறு
துவைத்தேன்..
மற்றவை
அழுக்குச் சேற்றில்
அழுது வடிந்தன..
உலகம்
அதன் நேரத்திற்கு
உறங்க சென்றது..
நானும் அப்படியே..
1 comment:
தூக்கம் களைந்த உங்கள் பேனா
நல்ல ஆட்டம் போடுகிறது ..
ஆட்டம் அருமை.
Post a Comment