Saturday, January 19, 2008

நீலிக் கண்ணீர்


கைக்குட்டை நுனி,
துப்பட்டா தலை - இரண்டும்
கண்ணீரை ருசித்து நனைந்தது..!

உன் கண்ணீர்த்துளிக்கும்
பனித்துளிக்கும் - ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிப்பது கடினம்..!..

மலைப்படுகையில் சூரியன்
உதயமாகும் போது மேகம் சிவக்குமாம்..
உண்மையை உறுதி செய்தேன் -
அழும் போது உன் மேனியைக்கண்டு..

பெண்மை -
பிறந்தது ஓரிடம்..
வளர்ந்தது வேறு தடம்..
யாவும் புரிந்தது உன் சிணுங்களில் மட்டுமே..

உன் இதழ் மென்மையிலும்
ஓரிரு வார்த்தைகள்
சிக்கித்தான் மடிந்தன..

நேரொன்றில்லாமல்
கீழொன்றில்லாமல்
தாயம் விளையாடியது கண்கள்..

அடைத்துக்கொண்டது இதயக்குழி
துடைக்க மட்டும் மனமில்லை -
ரசித்தப்படியே நானும் நனைந்தேன்..

No comments: