பால்..
பழம்..
ஊதுப்பத்தி..
இன்று முதலிரவு..?..
எனக்கு மட்டும்
கேட்கிறதாதென்று தெரியவில்லை -
மின்விசிறியிலிருந்து சத்தம் வருகிறது..
இன்று மட்டும்
எப்பொழுதும் இல்லாத வியர்வை -
மின்விசிறி இருந்தும்..
யார்யாரோ என்னைப் பற்றி
யோசிப்பதைப்
போலவே தோன்றுகிறது..
களமும் வேறு -
போரும் வேறு - ஆனால்
அருகில் இருக்கும் எதிரி
என்னால் தூக்கிலிடப்பட்டவள்..
பிடிக்காததைச் சொல்லலாமா ?-
பிடித்ததைச் சொல்லலாமா ?..
முதலில் இங்கு பேசவே கூடாது..
சரி -
முதலில் முத்தமிடுவதா? -
இல்லை அணைப்பதா..?..
அணைப்பதென்றாலும்
விளக்கை அணைத்தப் பிறகா ?
இல்லை அதற்கு முன்னதாகவா..?
ஜன்னல் வழிவந்த
இதமானக்காற்று
இதயம்வரை செல்லவில்லை..
பூத்தப்பூக்களும்
கட்டிலின் கால்களும்
கிரீச்..கிரீச்சென சிரிக்கிறது..
நெருப்பு சுடும் - அறிவேன்!..
உடல் சுடும் - அறிவேன்!..
மெத்தையும் சுடும் அறிந்தேன்.!..
No comments:
Post a Comment