ஊர்பேர் தெரியாது..
நாடுநகரம் அறியாது..
ஊராமல் நகராமல் பெற்ற
உயிரை உயில் எழுதித்தரும்
கோடீஸ்வரி!!
மறுவாழ்வு கொடுத்தாய்..
கருஉரு தந்தாய்..
வரம் பெறாத வாழ்வுதனில்
தாய் பட்டம் பெற்றுத்தரும்
தாயிவளே!!
ஏனென்றும் கேட்டறியவில்லை..
ஊணென்றும் படுத்துறங்கவில்லை..
படைத்தவனை பறை சாற்றாமல்
உருக்குலைந்த தன் வாழ்விற்கு
உருவம்தரும் ரோஷக்காரி!!
பிள்ளைபேறு பெற்றேன்..
'ம்மா'வென்று கேட்டு அகமகிழ்ந்தேன்..
பெற்றவயிறும் உயிரும் பட்டினியிடாமல்
செவ்வனே செப்பனிட்டுவரும்
செவிலித்தாய்!!
பத்துமாதம் சுமந்து பெற்றேன்..
இரவு உறங்காது காத்து நின்றேன்..
தாய்வரம் பெற்றுத் தருவதானாலும்
பணம்தனைப் பெறுவதால் -
என் பெயர் வாடகைத்தாய்..!!
4 comments:
Nice! Y u didnt touch the concepts of 'education - solds for money' .
Poverty etc.,
Nice but at last line i suggest, U have to say
Ival peyar not yen peyar.
bcoz in previous line u writen like 3 rd person talking about her
Thanks !!..
happy to see this message..
Will consider this and not to happen in future..
Jayaram
Post a Comment