Tuesday, January 1, 2008

மணல் வீடு

சொல்வதற்கு முன்னே
விரும்பியவற்றை யாவும்
சொடிக்கிய நிமிடத்தில்..

வாசலில் பூசணிப்பூ கோலம்;
விட்டு விட்டு கூவும் சேவல்;
சாம்பிராணி வாசனை முற்றத்தில்..

தங்கைக்கு குதிரை வால்
ரெட்டை ஜடை அலங்கரித்து
முத்தமிடுவேன் கன்னத்தில்..

அத்தை மாமா வேண்டாம்;
அம்மா அப்பான்னு கூப்பிடுவேன்;
தாயம் விளையாடுவேன் கூடத்தில்..

மிஞ்சும் நேரங்களிலும்
விடியல் வாசல வந்த பிறகும்
கொஞ்சனும் கெஞ்சனும் கட்டிலில்..

வெள்ளிக்கிழமை விளக்கு போடுவேன்;
சத்தமா பாட்டு பாடுவேன்;
மெளன விரதம் இருப்பேன் சனிக்கிழமையில்..

தேன் சுவைக்கொண்ட வார்த்தைகளை
தேனீ சுவைத்தாலும் திகட்டியே
மறித்திருக்கும் இதழ்மடியில்..

நினைக்கும் போதே...?
உப்பு நீரோடு கூடுதலாய் கண்ணீரையும்
சுவைத்தது கடல் மணல்..

3 comments:

Paul said...
This comment has been removed by the author.
Paul said...

Good one... Naan romba rasitha kavithaigalil ithuvum onnu... but innum neraya ezhuthi irukalamo apadinu thonichu...

Anonymous said...

really it recals my childhood days!
nice lines.....